Wednesday 2 July 2014

ஆய் அண்டிரன்

வேள் ஆய்,பொதிகை மலைத் தலைவன்.இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு.பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன்.ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும்,அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான்.தோல்வியுற்ற கொங்கர்,வேல் முனையை மாற்றி எறிந்து
விட்டு போர்களத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும்,
இரவலர்களுக்கும் ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது.நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து...ஒரு நாள் இறந்தே போனான்.


No comments:

Post a Comment