Saturday 28 June 2014

ஆயர்கள் புரிந்த போர்கள்


 இடையர் புரிந்த போர்கள்:

ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலர் என்ற பெயர் முல்லை நிலத்தில்  தோன்றியது தான்! கோவலன் = கோபாலன் = கண்ணன்!

வெட்சி திணை:
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழில் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.கோவலர் ஆநிரை கவர்வதில் வல்லவர்
 மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத்துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும்  ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.

கரந்தை திணை:

கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

ஏழை, இடையன், இளிச்சவாயன்


சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்கு பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள், அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம் என்றனர்.

உடன் இடைக்காடர் அவர்களிடம், ஏழை, இடையன், இளிச்சவாயன் இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள். உங்களை துன்பம் நெருங்காது என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான். ஏழை என்பது ராமனையும், இடையன் என்பது கண்ணனையும், இளிச்சவாயன் என்பது நரசிம்மரையும் குறிக்கும்.

ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாக பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.

அவரே கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்தார்.

நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை இளித்தவாயன் எனக் குறிப்பிட்டார்.

இளித்த என்றால் வாயை திறந்த என்றும் பொருள் உண்டு.

யாரந்த நப்பின்னை?


விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே

(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.

(இன்னிலை: பாடல் 22)

யாதவராயர்கள்


யாதவராயர்கள் என்போர் 12,13ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் கீழே இருந்த குறு நில மன்னர்கள்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி போசள அரசன் வீர வல்லாளனுக்கு அடியிலும்,
பின்னாளில் 14-ம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசிற்கும் அடியில் தொடர்ந்தது. இவர்கள் கீழைச்
சாளுக்கியர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மேலும் தென் தமிழக யாதவர்களுக்கும் தொண்டைமண்டல யாதவர்களுக்கும் யாதவராயர் என்ற பட்டம் இருந்தது.யாதவராயர்கள் கிட்டத்தட்ட மாநில
ஆளுநர்கள் போலச் சோழர்களுக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்கள் திருக்காளத்திக் கோயிலிலும்,
திருவேங்கடம் கோயிலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

இவர்களின் முதல் அரசன் சாளுக்கிய நாராயணன். அவன் பேர்கொண்ட மரக்காலில் தான் திருவேங்கடம்
கோயிலில் 17-ம் நூற்றாண்டு வரை கோயிலுக்கு வரும் கூலங்களை (தானியங்களை) அளந்திருக்கிறார்கள்.
இந்தக் குலத்தில் வந்த வீர நரசிங்க தேவன் (கி.பி.1205 - 1262) துலாரோகணம் (துலையின்
ஒருபக்கத்தில் இவனும் இன்னொரு தட்டில் பொன்னும் இட்டு அளந்து அதை கோயிலுக்குக் கொடுப்பது) செய்து வந்த
மாழையைக் கொண்டுதான் கோயில் விமானத்திற்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள். இன்றும் அந்தப்
பொன்வேய்வை நாம் பார்க்கிறோம். சென்னையின் அருகில் உள்ள திருவொற்றியூரில் தன் பெயரிலேயே வீர
நரசிங்கேசுவரம் உடைய நாயனார் என்றபெயரில் படிமம் அமைத்துள்ளான்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப்
பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்
போல் தெரிகிறது. (ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது.) கல்வெட்டில் சிதைந்து
காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது.

ஓதவளர் வண்மை ஓபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ்வினி தூழிபுக
மருக்குலவும் சோலை வடவேங்கட வாணர்க்குத்
திருக்கைமலர் தந்தான் சிறந்து.

பழங் கல்வெட்டில் வந்துள்ள வேறு ஏதேனும் வெண்பாக்கள் இருந்தால் இடுங்களேன். ஒலையில் இருந்தவற்றை மட்டும்
தானே நாம் அறிந்துள்ளோம்.

ஆயர் குல வள்ளல் பேகன்

  பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்:
 
 


வேள் - பேகன்.

இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன் (ஆ+இனம்+குடி =>ஆவினன் குடி =>ஆயர் குடி ); இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

" அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
  உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
  வரையா மரபின் மாரி போலக்
  கடாஅ யானைக் கழற்காற் பேகன்
  கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

" உடாஅ போரா ஆகுத லறிந்தும்
  படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
  கடாஅ யானைக் கலிமான் பேக!"

எனப் பரணரும் (புறம்-141)

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன்


ஆய் குல மன்னர்கள் பொதிகை மலை அருகே உள்ள ஆயக்குடியை தலைநகராய் கொண்டு ஆண்டு வந்தனர் இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டதை கொண்டு உள்ளனர். இவர்கள் தங்களை ஆய் குலம் என்றும் யாதவ குலத்தினர் என்றும் செப்பேட்டில் கூறியுள்ளனர். இவர்கள் ஆயக்குடியை தலைநகராய் கொண்டு பல பகுதிகளை ஆண்டு உள்ளனர். இவர்களில் ஓர் அரசன் தான் கோகருந்தடக்கன்

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன் கி.பி 855ல் பாபநாசம்,திருநெல்வேலி,கழுகுமலை,கோயில்பட்டி,சங்கரன்கோவில்,நாகர்கோவில்,திருவனந்தபுரம் பகுதிகள் அக்காலத்தில் மலைநாடு என்று அழைக்கப்பட்டன. அப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவன் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் சமகாலத்தவன். 1904 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோபிநாதராவ் என்பவர் முதன் முதலில் திருவிடைகோடு என்ற இடத்தில் கோகருந்தடக்கனை பற்றி சில கல்வெட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதன்பிறகு 1908 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் செப்பேடுகளில் திரு.கோபிநாதராவ் படித்து பார்த்தபோது இதில் எல்லா தமிழ் செப்பேடுகளிலும் கோகருந்தடக்கன் என்ற பெயர் பொறிக்கபட்டிருந்தது கண்டு ஆச்சரியமுற்றுள்ளனர். இந்த செப்பேடுகள் மூலம் இவன் ஒரு ஆயர் குல அரசன் என்பதும் இவன் ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பதிவு செய்துள்ளான்.

இதில் மீன்சிரை என்ற ஊரில் இருந்த உலக்குடிவில்லை என்ற பெயருடைய ஒரு நிலத்தை மீன்சிரை கிராம சபையிடமிருந்து கோகருந்தடக்கன் விலைக்கு வாங்கி அந்த நிலத்தின் நான்கு பக்கமும் பெண் யானையை நடக்கவிட்டு அளந்து கற்கள் நட்டு ஒரு விஷ்ணு கோவிலை நிர்மானித்தான் பின்பு அந்த பகுதிக்கு பார்த்திவ சேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். செப்பேட்டின் இரண்டாவது இதழில், பார்த்திவ சேகரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் பூசாரிகள் கடமை பற்றியும், கோவிலுக்கு மலர்கள் தருபவர்களின் தினசரி வேலை பற்றியும் கோவிலில் அணையாவிளக்கு அமைத்து பராமரிப்பவர்களுக்கான கூலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்பேட்டில்,கல்விச்சாலையில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விஷ்ணு கோவிலை ஒட்டி 95 மாணவர்கள் தங்கி படிக்க ஒரு சாலையும் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், மாணவர்கள் பள்ளியில் தங்கும்போது மற்ற மாணவர்களை துன்புறுத்தக்கூடாது,மாணவர்கள் தங்கும் இடத்தில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களுக்கு கொண்டுவரக்கூடாது. ஆயுதத்தால் சகமாணவர்கள் இம்சிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இச்செப்பேட்டின்படி வேதப்பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்ட உணவுச்சாலை பொழிசுழ் நாட்டைச்சேர்ந்த குரட்டுர் நாட்டிற்கு உட்பட்ட இடைக்குரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தது.இந்த பள்ளி ஒரு தர்மஸ்தாபனம். தர்ம ஸ்தாபனம் எந்த வகையில் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடைபெறுகிறதா எனமலைநாடு,சிங்கால் நாடு,முதலநாடு,படைப்பாநாடு மற்றும் வழுவா நாட்டு மக்கள் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மலை நாட்டை ஆண்ட ஆய் குல அரசர்களின் நியாயமான ஆட்சி முறை தெரிகின்றது. வாழ்க வளர்க! ஸ்ரீவல்லபன் என்று அழைக்கப்படும் இவ்வரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன், நந்தா அரசன் வழியிலும் யாதவ குளத்திலும் தோன்றியவன்.தனது தலைவன் கிருஷ்ண பரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்.

கீழே குறிப்பிட்ட ஆவணங்கள் ஆய்குல ஆட்சியில் ஆயக்குடி தலை நகராக இருந்ததையும். பின்னாளில் வாழ்ந்த ஆய்குல அரசி ஆய்குல மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்

215. The Trevandram Huzur office plates of Kokkaru-
nandadakkan- '.Tamil language and alphabet.) Records that on
14490871!! day of the Kali era, and fifteenth day of the ninth year
of king Karunandadakkan, he purchased from the Sabha of
Minchirai a plot of land, erected a Vishnu temple on it together
with a sdUi for 95 saftars (scholars) and endowed lands for temple
services, lamps, festivals, etc. The king must have ascended the
throne about A.D. 855-6. He belonged to the Yadava or Aykula
dynasty who ruled over the mountain tracts of South Travancore
who had Ayakudi for their capital and who were called the Lords
of the Podiya mountain. Mr. Gopinatha Rao traces the history of
the Ay king Andiran as far as it is ascertained from the Purand-
nuru. See Trav. Arch. Scr., Vol. I, p. 3. He also points out that
Karunandadakkan of these plates should be the same as Adakkan
or Sri Vallabha, the son of Karunandan and grandson of Sadayan,
and contemporary of Varaguna Pandya, who came to the throne in

216. The Huzur office plate of Vikramaditya Varaguna.
(Tamil.) The record belongs to the eighth year of king Vikrama-
ditya Varaguna and says that while staying at Tirunandikarai he
married Murugan Sendi or Aykula Mahadevi, the daughter of
Teriganadu Kilavan, and granted some lands for her enjoyment.
Mr. T. A. Gopinatha Rao gives arguments to show that this king
was the successor of Kokkarunandadakka referred to in the
previous inscription. See Trav. Arch. Ser., Vol. I, No. II.

ஆதாரம்:

http://www.ebooksread.com/authors-eng/v-vijayaraghava-rangacharya/a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala/page-28-a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala.shtml

புதுக்கோட்டை அரசர் பொப்பண்ணக் காங்கேயர் கோன்


            யாதவ மன்னர்கள் பலரின் வரலாறு மறைக்கப் பெற்றுள்ளது. அதே போன்று பலருடைய வரலாறு வெளிக்கொணராமலே உள்ளன. இவ்வாறு வெளிவராமல் இருந்த வரலாற்றில் ஒன்று தான் 2000 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையை ஆண்ட பொப்பண்ணக் காங்கேயர் கோன் ஆகும்.
          பொப்பண்ணக் காங்கேயர் கோனின் கோட்டை, புதுகோட்டை அருகே கலசமங்கலம், சிங்கமங்கலம் ஆகிய இரு ஊர்களையும் இணைத்து புதுக்கோட்டை அரசர்களால் ஏறத்தாழ கிபி.1250 இல் இரண்டரை மைல் சுற்றளவுக்கு கட்டப்பட்டதே புதுக்கோட்டையும், கொத்தளங்களும். ஆனால் இன்று கோட்டையின் சுவடுகள் இல்லை. எனினும் பழைய கோட்டையின் சுவடுகளைப் புதுக்கோட்டை நகரத்துக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பளவில் அடி உயர மேடாகக் காணப்படுகிறது. பொப்பண்ணக்கோன் கோட்டைக்கு வெளியே கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு முனிஸ்வரன் கோவில்களும், தெற்கே அய்யனார் கோவிலும், வடக்கே காளி கோயிலும் உள்ளன. இந்த நான்கு கோயில்களும் அந்த கோட்டையின் காவல் தெய்வங்களாகும். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தாம் உரை எழுத அடிப்படைக் காரணம்.
          “கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ணக் காங்கேயர் கோன் அளித்த சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றும் உரைவித்ததே” என்று கூறுவதிலிருந்து அடியார்க்கு நல்லாரை ஆதரித்த வள்ளல் பொப்பண்ணக் கோன் எனத் தெரிய வருகிறது.
           “தமிழகத்தில் சங்க கால மன்னர் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் பெருமளவில் அழியாமல் உள்ள ஒரே இடம் பொப்பண்ண கோட்டை எனலாம்” என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். எனவே யாதவ மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொருட்டுத் தற்போதாவது சமுதாய நலனில் அக்கறை உள்ள கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டால் பல குறுநில மன்னர்களின் வரலாற்றை வெளிக்கொணரலாம்.           

இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்


திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வேணுநாதர் என்ற பெயருண்டு. ஆம்! இந்த வேணுநாதர் ராமக்கோன் என்பவருக்குக் காட்சி அளித்தார்.ராமக்கோன் தனது மாட்டுக் கொட்டகையில் சென்று பால் கறந்து பாலை வெளியே கொண்டு சென்ற பொழுது தினமும் சொல்லி வைத்தாற்போல ஒரு மூங்கில் புதர் அருகே வந்ததும், கையில் இருந்த பால் சிந்துவதும் வழக்கமாக இருந்தது. ஒருநாள் புதரை வெட்டி அகற்ற முற்பட்ட போது, அதன் தலையில் வெட்டுப்பட்ட சுயம்பு மூர்த்தி ஒன்றைக் கண்டார். இதுவே இன்றும் நாம் வணங்கும் நெல்லையப்பர் எனும் வேணுநாதர் ஆவார்.
         “இராமன் இலங்கைக்குச் செல்லும் போது இந்த நெல்லையப்பரை வணங்கி விட்டுத்தான் சென்றார்” என்று கோவில் புராணம் கூறுகிறது. ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது? இராமபிரானுக்கு முன்னரே இராமக்கோன் பிறந்துள்ளார் என்பது தெரிகிறதல்லவா!

Friday 27 June 2014

தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன்


     சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால் கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மைதான். ஆம்! அந்த யாதவனின் உண்மைப் பெயர் மணவில் கூத்தன் காலிங்கராயன் என்பதாகும். தொண்டை மண்டலத்து 24 கோட்டைகளில் ஒன்றான மணவில் எனும் ஊரின் தலைவன் குலோத்துங்கனுடைய படைத்தலைவனாக இருந்து பாண்டிய நாடு, வேணாடு, மலைநாடு, முதலிய நாடுகளோடு போர் நடத்தி புகழ்பெற்றவன். இந்த யாதவனால் சோழ மன்னன்க்குப் பெரும் புகழ் உண்டாகியது. இவனுக்கு ‘காலிங்கராயன்’ என்னும் பெயர் சூட்டிச் சிறப்பித்தனர். பாண்டிய நாட்டில் இவன் வாழ்ந்த போது தான் தன் இனத்தைச் சேர்ந்த மாதரிக்கு இடைச்சி அம்மன் என்ற பெயரிலேயே மதுரையில் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது வரலாறு

(ஆதாரம்:‘குமுதம்’ பக்தி ஸ்பெஷல்-தகவல் திசைமுத்து)

தத்துவஞானி திருமூலர்


சைவத்திருமுறைகளில் பத்தாந்திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருமந்திரம். ”மூலன் உரை செய்த மூவாயிரம்” எனப் போற்றப் பெற்றது அந்நூல். அந்நூலாசிரியரான திருமூலரின் ஆகமப் பொருளைத் தழுவிய கருத்துக்களும் சித்தாந்தக் குறிப்புகளும் இந்நூலில் பரவிக் கிடக்கக் காணலாம்.
                   அறுபான் மூவரான சைவ அடியார்களுள் திருமூலரும் ஒருவர் அவர் ஆயர் குலத்தினர். தமிழறிவோடு ஆழ்ந்த வடமொழிப் புலமையும் வாய்ந்தவர். கயிலையிலுள்ள யோகி ஒருவர் தமிழ் நாட்டிற்கு வந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மூலன் என்ற ஆயனின் உடலில் நுழைந்து திருமூலரானார் என்று ஒரு கதை கற்பித்திருக்கிறார்கள்! அறிவு-மேல் வகுப்பினருக்கே உரியது என்ற கொள்கையுடையவர்கள் கற்பனை அது. கதை நாம் அறிந்ததுதானே! தமிழையும் தாமிரபரணி நதியையும் அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டு வந்தார் என்று நம்பும் மக்களைப் படைத்த நாடு தானே இது! திருஞானசம்பந்தர் இளம் வயதிலேயே சிவனருள் பெற்றுத் திருப்பதிகம் பாடி பல அறிய சாதனை படைத்தார் என்பது உண்மை தானே! கீதையை உலகினுக்களித்த கண்ணனை, திருமாலின் அவதாரமென்றும், ஆயர் குலக்கொளுந்தென்றும் போற்றும் இம்மக்கள் திருமந்திரம் இயற்றிய திருமூலரை ஆயன் தான் என ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏனோ?
                    தம்மோடு அருள்பெற்றவர் எண்மர் என்றும், தம்முடைய சீடர்கள் எழுவர் திருமூலர் கூறுகிறார்.
         “ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
         தேடியும் கண்டேன் சிவன்தன் பெருமையை”
என்று கூறும் அவர் கைலையிலிருந்து வந்தது எவ்வாறோ தெரியவில்லை! அவர் மூவாயிரம் ஆண்டுகள் யோகம் செய்து, ஆண்டுக்கொரு திருமந்திரமாக மூவாயிரம் செய்யுள் இயற்றி ஆகமப் பொருளை வெளிட்டாராம்! நூறு ஆண்டு மனித வாழ்வின் எல்லை என்னும் போது மூவாயிரம் ஆண்டுகள் அவர் வாழ்ந்தாரென்பது ஒரு கற்பனையே!
       ‘வேத நூற்பாயிரம் நூறு மனிதர்தாம் புகவர்’ என்பது தொண்டரடிப் பொடியாழ்வார் திருவாக்கு.
       திருமந்திரம் வாட மொழியின் வழி நூலா-முதன் நூலா என்பதற்கு இவர் கூறும் பதிலே சான்று பகரும்.
        “அரனடி நாள்தோறும் சிந்தை செய்து
        ஆகமம் செப்பலுற் றேனே”
என்னும் அவர் திருவாக்கே, திருமந்திரம் தமிழில் தோன்றிய முதல் நூலே என்பதைக் காட்டும்.
        “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
         தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே”
என்று, இறைவன் தம்மை படைத்ததே தமிழில் ஆகம நூல் அருளிச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார் அவர். ஆகையால், கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது-புராணப் புளுகு. திருமூலர் நூலிலே இவற்றிற் கெல்லாம்  ஆதாரம் இல்லை.
        “வேதத்தை விட்ட அறம் வேறில்லை. எனவே தர்க்கவாதத்தை விட்டு அறிஞர்கள் வேதத்தை ஓதியே வீடு பெற்றார்கள்” என்கிறார் திருமூலர். மொழி விஷயத்திலும் வீணான வாதம் கூடாது என்கிறார் திருமூலர். தமிழையும், வடமொழியையும் உணர்த்துபவன் அவனே என்கிறார்.
             “பண்டிதராவார் பதினெட்டுப்
              படையும் கண்டவர்”
        என்பர் திருமூலர். ஒரு மொழியே அறிந்தவர் பண்டிதராக மாட்டார் என்பது அவரது கருத்து.
        தேசமும் நாடும் தேடித் திரிந்து முடிவில் பரம்பொருளைத் தமது உடம்பிற்குள்ளே கண்டு கொண்டார் அவர்.தேடித் திரிந்த மற்றவர்களோ, மனம் நொந்து, போன இடம் தெரியாமல் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம்! “என் உடல் கோயில் கொண்டானே இறைவன்” என்கிறார். தங்கள் உடம்பிலேயே அந்த இறைவன் குடியிருப்பதை அவர்கள் அறிந்தாரில்லை.
         “உடம்புள உத்தமன் கோயில் கொண்டானென்று
         உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே”
என்கிறார். சரீர சித்தி செய்து பல காலம் வாழ்ந்தார் எனத் திருமூலர் கூறுகிறார். உண்டியைச் சுருக்கி ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டாராம். பிரம்மச்சரியம். பிராணாயாமம் முதலிய உபாயங்களின் உதவியால் இவர் இயற்கையோடும், இறைவனோடும்இசைந்து தூய ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து வந்தார் எனலாம்.
            “சாத்திரம் ஒதும் சதிர்சகளை விட்டுநீர்
             மாத்திரைப் போது மறந்துள்ளே நோக்குமின்”
என்று மூட நம்பிக்கைகளை விட்டு அவன் அருளை நம்பி அவனைக் காண வேண்டும் என்கிறார். இறைவன் ’பொய்க் கலந்தருள் புகுதாப் புனிதன்!’
            “ஒத்தப் பொறியும் உடலும் இருக்கவே
            செத்துத் திரிவர் சிவஞானி யர்களே”
என்று சிவஞானிகளின் சிவன்முத்தி நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர். உடம்பும் பொறிகளும் பிறரை ஒத்திருந்தாலும் உள்ளத்தாலும் ஆன சுத்தியாலும் சிவஞானி வேறுபட்டவன். உலகத்தில் உலகப் பற்று இல்லாமல் திரிபவன் அவன். சிந்தர்கள் சிவலோகத்தை இகலோகத்தில் கண்டவர்கள்.
        திருமூலருடைய சைவ சித்தாந்தம் ‘சித்த மார்க்கம்’-அஷ்டமா சித்திகளை திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த சித்திகளையெல்லாம் அருளுபவன் எல்லாம் வல்ல இறைவன் என்ற சித்தன். சித்தம் திரிந்து சிவமயமானால் சித்திகளும், சக்திகளும் நம்மையும், பிறரையும் உய்விக்கப் பயன்படும். யோகிகளின் சமாதி நிலையைச் சித்தரும் விரும்பி அடைவர் என்கிறார் திருமலர்.
        “நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்” என்று வீர வாதம் பேசும் அவர் இதயக் கமலத்திலே சிவ நடனம் நடைபெறுவதாக் கூறுகிறார்.
            “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
            மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
            மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
            பார்ப்பான் பசு ஐந்தும் பாலைய்ச் சொரியுமே”
என்கிறார். ஐம்பொறிகளையும் அருள் வழியில் அடக்கினால் ஆணவ நெறி அடங்கி உடலும் பொறியும் சிவ கைங்கரியம் செய்யும் என்பது கருத்து.
        சைவ அடியார்களுக்குள் மூலன் என்ற திருமூல நாயனாருக்குச் சிறந்த இடம் உண்டு. பல தத்துவங்களையும் விளக்கி ஆகம விதிகளை முதலில் எடுத்துக் கூறியவர் அவரே ஆவார். யோகிகளாய் உபாயங்களைப் பயன்படுத்தி முக்காலங்களையும் உணர்ந்த மாமூலர் முதலியோர், “அறிவன் தேஎத்து அனை நிலை வகையோர் ஆவர்” என்பர்.
       அவர்க்கு மாணாக்கராகித் தவம் செய்வோர் தாபத பக்கத்தவராவர் என்று நச்சினிக்கினியார் அவரைப் பற்றிய செய்தி ஒன்று வழங்கி வந்ததைக் கூறுகிறார். எனவே அவர் ஆக்கமும் ஆழிக்கவும் செய்யும் ஆற்றலுடைய தமிழ் முனிவராகக் கருதப்பட்டு, இவர்தம் திருவாக்குகள் நூலுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் உணரலாம்.    


       
             

Monday 16 June 2014

Tamil Yadav Songs Free download

Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs

Veeran azhgumuthu kone Download Songs1

Veeran azhgumuthu kone Download Song2

Veeran azhgumuthu kone Download Song3

Veeran azhgumuthu kone Download Song4

Gurusamy Yadav Song Download